இலங்கை விமானப்படைக்கு புதிய பதவி நிலை பிரதானி நியமனம்
இலங்கை விமானப்படையின் புதிய பதவி நிலை பிரதானியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர (Air Vice Marshal Lasitha Sumanaweera) நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் இன்று (04) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை (Sri Lanka Air Force) தெரிவித்துள்ளது.
தற்போது விமானப்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றும் ஏர் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர, 1991 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் இணைந்தார்.
விமானப் பாதுகாப்பு இயக்குநர்
2017 ஆம் ஆண்டில், பலாலியில் உள்ள இலங்கை விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டதுடன் 2018 ஆம் ஆண்டில் வவுனியாவின் தளத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
விமானப்படை வரலாற்றில் முதல் விமானப் பாதுகாப்பு இயக்குநராக பணியாற்றிய இவர் சில விருதுகளைப் பெற்றிருந்தார்.
இலங்கை விமானப்படையின் புதிய பதவி நிலை பிரதானியாக பணியாற்றிய ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன (Air Vice Marshal Sampath Wickramaratne) நேற்று (03) சேவையில் இருந்து ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 18 நிமிடங்கள் முன்
