சிறிலங்காவில் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி - நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

Tamil Media Sri Lanka Sri Lanka Social Media Sri Lanka Prevention of Terrorism Act
By Beulah May 31, 2023 05:46 AM GMT
Report

மக்கள் தகவல் அறியும் உரிமையை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலத்தின் ஊடாக, ஊடகங்களுக்கான புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கும் நிலைப்பாட்டிலேயே இதுதொடர்பில் பேசப்படுகின்றது.

சட்டமூலத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை உப குழு ஏற்கனவே அடிப்படை சட்டத்தை தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அக்குழுவின் தலைவரான  அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச நேற்று(30) இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

சட்டரீதியிலான அனுமதி பத்திரம்

சிறிலங்காவில் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி - நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல் | New Law For Media Sl Prevention Of Terrorism Act

இதுதொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“இச்சட்டமூலத்தை நாம் நிறைவுசெய்துள்ளோம். அடுத்த வாரத்தில் இதுதொடர்பில் கலந்துரையாடவுள்ளோம்.

அனைவரும் சேவையை ஒரே முறையில் மேற்கொள்வதற்கு உரிய சட்டரீதியிலான அனுமதி பத்திரமொன்றை வழங்குவதுடன், அந்த நிறுவனங்களுக்கிடையே சம அளவில் நிபந்தனை அல்லது நடைமுறை இருக்க வேண்டும்.

குறித்த நிறுவனங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதனையும் தடுக்க வேண்டும். இதற்கமைவாகவே நாம் ஏற்பாடுகளை தயாரித்துள்ளோம், இது ஒருபோதும் ஊடகங்களை ஒடுக்குவதற்கான முயற்சியல்ல” என தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான முயற்சியா

சிறிலங்காவில் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி - நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல் | New Law For Media Sl Prevention Of Terrorism Act

இதுகுறித்து சிவில் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில், “பயங்கரவாத தடைசட்டத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடும், அரசாங்கத்தின் திருட்டு குண்டர்களை அம்பலப்படுத்தும் ஊடகங்களை ஒடுக்க முயற்சித்தது.

ஆனால், உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் எழுந்த பாரிய எதிர்ப்பின் காரணமாக பயங்கரவாத தடை சட்டத்தை ஒத்தி வைக்க வேண்டி நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்காணும் முயற்சியின் மூலமாக கட்டுப்படுத்த முடியாமல் போன ஊடக சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான முயற்சியே ஒளிபரப்பு அதிகார சபை சட்டம் கொண்டு வர காரணம் என புலப்படுவதாக” தெரிவித்துள்ளனர்.

மேலும், மக்கள் தகவல் அறியும் உரிமையை தடுப்பதற்கா அரசாங்கம் முயற்சிக்கின்றது ? என்பதனை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என சட்டதரணி மனோஜ் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021