கண்ணீர் விடும் இலங்கைத் தமிழர்கள் - பிரித்தானிய புதிய சட்டத்தால் உருவாகியுள்ள அச்சம்

Sri Lanka Tamil diaspora England
By Dharu Mar 10, 2023 04:15 PM GMT
Report

சட்ட விரோத புலம்பெயர்வோருக்கு எதிராக பிரித்தானிய அரசு கொண்டுவர இருக்கும் சட்டம் புலம்பெயர்ந்தோரை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

பிரித்தானியாவில் புகலிடம் கோரும் நோக்கில் வந்த சிலரை ஊடகவியலாளர்கள் சிலர் சந்தித்தனர்.

அப்போது, தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர் அவர்கள். இலங்கையிலிருந்து துன்புறுத்தலுக்கும் சித்திரவதைக்கும் தப்பி பிரித்தானியாவுக்கு வந்த Abinthan (21) என்பவர், பல முறை தான் புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் அளித்தும் தனது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததால், தான் தான் உயிரைப் பணயம் வைத்து சிறு படகொன்றில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்கு வந்ததாக தெரிவிக்கிறார்.

ருவாண்டாவுக்குச் செல்ல விரும்பவில்லை

கண்ணீர் விடும் இலங்கைத் தமிழர்கள் - பிரித்தானிய புதிய சட்டத்தால் உருவாகியுள்ள அச்சம் | New Law New Problem For British Diaspora Sl Tamils

கண்களில் பயத்துடனேயே அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே பேசும் Abinthan, ஓரிடத்தில் காவல்துறை மகிழுந்து நின்றால் நான் அந்தப் பக்கம் போவதையே தவிர்க்கிறேன் என்று கூறுகிறார்.

அவரைப்போலவே இலங்கையில் வர்த்தகம் கற்ற Ayudson, தானும் சித்திரவதைக்குத் தப்பி பிரித்தானியாவுக்கு வந்ததாகத் தெரிவிக்கிறார். தானும் தலைமறைவாக இருப்பதாகத் தெரிவிக்கும் Ayudson, நாங்கள் வெளியே செல்லவே முடியாது, எங்களை யாராவது பிடித்தால், எங்களை ருவாண்டாவுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று பயந்துபோய் இருக்கிறோம்.

நாங்கள் ருவாண்டாவுக்குச் செல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.

தலைமறைவு

கண்ணீர் விடும் இலங்கைத் தமிழர்கள் - பிரித்தானிய புதிய சட்டத்தால் உருவாகியுள்ள அச்சம் | New Law New Problem For British Diaspora Sl Tamils

இவர்களைப் போலவே இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு போலி ஆவணங்கள் மூலம் வந்த Dravid (28) என்பவரும், தான் தனது புகலிடக்கோரிக்கை தொடர்பில் உள்துறை அலுவலகத்திற்குச் செல்லவிரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

அவர்கள் என்னைப் பிடித்து ருவாண்டாவுக்கு அனுப்பிவிடுவார்கள், எனக்கு தலைமறைவாவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்.

இந்த மூவருமே இப்போது தலைமறைவாக இருக்கும் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருடன் இணைந்துகொள்ள இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

வாழ்க்கையை ஓட்ட, சுத்தம் செய்தல், தோட்ட வேலை போன்ற சின்னச் சின்ன வேலைகளை செய்து எங்கே இடம் இருக்கிறதோ அங்கே தங்கிக்கொள்கிறார்கள்.

புகலிடக்கோரிக்கை விண்ணப்பம்

கண்ணீர் விடும் இலங்கைத் தமிழர்கள் - பிரித்தானிய புதிய சட்டத்தால் உருவாகியுள்ள அச்சம் | New Law New Problem For British Diaspora Sl Tamils

20 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவுக்கு வந்த இலங்கைத் தமிழரான கனகசபாபதி (Kanagasabapathy, 46), தனது புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், கிடைக்கும் தோட்ட வேலை போன்ற சின்ன வேலைகளைச் செய்துகொண்டு ஒரு வாகன பழுது பார்க்கும் இடத்தில் வாழ்ந்துவருகிறார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவ்வளவுதான், இவர்கள் மருத்துவ உதவி தேடக் கூட போராடவேண்டியிருக்கும். தலைமறைவாக, தான் தங்கியிருக்கும் இடத்தில் சமைத்தால் தீப்பிடித்துவிடும் என்று அஞ்சி, கிடைக்கும் உணவை உண்டு வாழும் கனகசபாபதி, பேசும்போது கண்களிலிருந்து கண்ணீர் கொப்புளிக்க, இதுதான் என் வாழ்க்கை, நான் கஷ்டப்படுகிறேன்.

ஆனால், எனக்குத் தெரிந்த சில நண்பர்கள் சாலையோரம் படுத்து உறங்குகிறார்கள், எனக்கு இந்த இடமாவது கிடைத்ததே என்கிறார். 

முழுமையான காணொளி 


GalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023