திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய அரசியல் - கஜேந்திரகுமார் எம்.பி
தமிழ் தேசத்தினுடைய அரசியல் அபிலாஷைகளை பாதுகாப்பதற்கும் அதேவேளை அந்த அரசியல் அபிலாஷைகளை முழுமையானதொரு அரசியல் தீர்வை வலியுறுத்துவதற்கும் உடைய ஒரு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் எம்.பி, இதில் பங்கேற்ற பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து ஒரு பொதுச்சபையை உருவாக்கியுள்ளதோடு, எதிர்காலத்தில் இணைய விரும்பும் ஏனைய தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளன என்றார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய அரசியல் யோசனைகளைத் தயாரிப்பதற்காக ஒரு பிரத்யேகக் குழுவை நியமிக்க இக்கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்கால அரசியல் நகர்வுதற்போதைய ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை நிராகரிக்கும் அதேவேளை, இப்பொதுச்சபையின் மூலம் எடுக்கப்படும் முடிவுகளே எதிர்கால அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் என இணக்கம் காணப்பட்டுள்ளது.

வரவிருக்கும் வாரங்களில் இக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும், அதனுடைய பெயர் பட்டியல் இறுதிசெய்யப்படும்.
இது தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல் என்றும் இந்த ஆதாரம் விளக்குகிறது என குறிப்பிட்டார்.
[AUDBP1Q ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |