எல்லை மீறிய இஸ்ரேலியர்கள்.! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
அருகம் விரிகுடா பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை காவல்துறை சுற்றுலாப் பிரிவின் பிரதி பணிப்பாளர் ஏஎஸ்பி பிரபாத் விதானகம தெரிவித்துள்ளார்.
அதன்படி, சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டினர் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலியர்களின் ஆதிக்கம்
அத்துடன், அருகம் விரி குடாவில் இஸ்ரேலியர்களின் ஆதிக்கம் தொடர்பில் இலங்கை வந்திருந்த காணொளி ஒன்று மக்கள் மத்தியில் பெரும் கவலைகளை எழுப்பியிருந்த நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும், இஸ்ரேலியர்கள் உட்பட அனைத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கும் இலங்கையில் தங்கியிருக்கும் போது முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசாங்கம் நேற்று உறுதியளித்திருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா
