மின்சார சபை ஊழியர்களின் புதிய சம்பள கட்டமைப்பு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை மின்சார சபையின் (Ceylon Electricity Board) ஊழியர்களுக்கு புதிய சம்பளக் கட்டமைப்பும், செயல்திறன் அடிப்படையிலான புதிய கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், புதிய மாற்றங்கள் அடுத்த சில வாரங்களில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் அறிவித்தார்.
இலங்கை மின்சார சபை
எதிர்காலத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட 26,000 இற்கும் மேற்பட்ட இலங்கை மின்சார சபை ஊழியர் அட்டைகள் திருத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில், சீர்திருத்தங்களின் கட்டமைப்பு, பல்வேறு பணிகளை செயல்படுத்துவதற்கான காலக்கெடு, வாரிசு நிறுவனங்களுக்கான நியமனங்கள், மனிதவள மேலாண்மை, சம்பள கட்டமைப்புகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.
மேலும், கொள்கை மற்றும் நிர்வாக முடிவுகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் ஆலோசிக்கப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)