இந்திய நிறுவனமொன்றால் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன கைக்கடிகாரம்: குவிந்து கிடக்கும் அம்சங்கள்
இந்திய நிறுவனமொன்று ஒரு தடவை முழுமையாக சார்ஜ் செய்தால் 12 நாட்கள் வரையில் பயன்படுத்தக் கூடிய கைக்கடிகாரமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, அமாஸ்ஃபிட் (Amazfit) என்ற நிறுவனம் இந்தியாவில் Bip 5 Unity என்ற நவீன கைக்காடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிகமான செயலிகள்
இந்த கைக்கடிகாரமானது, 1.91 அங்குல அளவு திரை (Display) மற்றும் 70க்கும் அதிகமான பதிவிறக்கம் செய்யக் கூடிய செயலிகளையும் கொண்டுள்ளது.

மேலும், இதயத்துடிப்பை கணக்கிடும் செயலி போன்ற அம்சங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நிறங்கள்
அத்துடன், அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நவீன கடிகாரத்தை ஒரு முறை மின்னேற்றம் செய்தால் 12 நாட்கள் வரையில் பயன்படுத்த முடியும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கைக்கடிகாரம் கறுப்பு, சாம்பல் மற்றும் பெண்களுக்கு பிடித்த இளஞ்சிவப்பு நிறத்திலும் சந்தையில் கொள்வனவு செய்யமுடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |