அச்சுறுத்தும் கொரோனாவின் புதிய திரிபு - இலங்கையர்களுக்கும் எச்சரிக்கை
கொரோனா வைரஸின் புதிய திரிபு இலங்கையில் அடையாளம் காணப்படவில்லையென சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
ஆனாலும், குறித்த திரிபு தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என என அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸின் புதிய திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது. BA 5 என்று பெயரிடப்பட்ட இந்தத் திரிபு குறித்து மிகுந்த அவதானத்துடன் பரிசோதித்து வருவதாக சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்
இந்த புதிய வைரஸ் 63 நாடுகளில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் ஏனைய வைரஸ்களை விட வேகமாகப் பரவுகிறது என்றும், முந்தைய கொரோனா வைரஸின் திரிபுகளை விட அதிகமாகப் பரவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் புதிய வகையும் கண்டறியப்பட்டுள்ளது. இது B.1.1.529 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் வேகமாக பரவி நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விஞ்ஞானிகள் ஆய்வு
உலக சுகாதார விஞ்ஞானிகள் இன்னும் வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் BA 5 வைரஸ் புதியதொரு திரிபாக உருவெடுத்துள்ளது.
