அடங்க மறுக்கும் ட்ரம்ப் : புதிய வரி விதிப்புகளை வெளியிடப்போவதாக அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட ட்ரம்ப் விதித்த வரி செல்லாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்ததுடன் அவரின் வரி விதிப்புகளையும் இரத்து செய்தது.
இதனால் கடுப்பான அவர் தனது சிறப்பு அதிகாரத்தைப் (சட்டப்பிரிவு 122) பயன்படுத்தி அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று அறிவித்தார். பின்னர் அந்த வரியை 15 சதவீதமாக உயர்த்தினார். மேலும், பரஸ்பர வரி விதிப்பை மீண்டும் அமல்படுத்துவதற்கான மாற்று வழிகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் னது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
அமெரிக்காவை சுரண்டும் நாடுகளுக்கு வரி
பல தசாப்தங்களாக அமெரிக்காவைச் சுரண்டி வரும் நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரியை, சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட 15 சதவீத அளவுக்கு உடனடியாக உயர்த்துகிறேன்.

அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அபத்தமான, மோசமாக எழுதப்பட்ட மற்றும் அசாதாரணமான அமெரிக்க எதிர்ப்பு முடிவை முழுமையாக, விரிவாக மதிப்பாய்வு செய்ததன் அடிப்படையில் எனது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
புதிய வரி கட்டணங்களை தீர்மானித்து வெளியிடும்
அடுத்த குறுகிய மாதங்களில் எனது நிர்வாகம் புதிய மற்றும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட புதிய வரி கட்டணங்களை தீர்மானித்து வெளியிடும் என தெரிவித்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |