திருத்தப்படும் வற் வரி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
புதிய பெறுமதி சேர் வரி (VAT) திருத்தங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய திருத்தங்களின்படி, மின்னணு தளங்கள் (Electronic Platforms) ஊடாக வழங்கப்படும் சேவைகளுக்கு ஜூலை 1 முதல் வற் வரி அறவிடப்படவுள்ளதுடன், டிஜிட்டல் சேவைகளுக்கான வரிப் பதிவு மற்றும் கொடுப்பனவு தொடர்பான புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
மேலும், முதன்மைச் சட்டத்தின் 10வது பிரிவின் கீழ் வரிப் பதிவுக்கான வரம்பைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய முன்மொழிவு
இதன்படி, ஒரு வரிக்குரிய காலப்பகுதியின் முடிவில், இலங்கைக்குள் மேற்கொள்ளப்பட்ட வரிக்குரிய பொருட்கள் அல்லது சேவைகளின் மொத்த விநியோகப் பெறுமதி 9 மில்லியன் ரூபாயைத் தாண்டியிருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினர் வரிப் பதிவை மேற்கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிதிச் சேவைகள் மீதான வற் வரியை 18 வீதத்திலிருந்து 20.5 வீதமாக அதிகரிப்பதற்கும் இந்த புதிய சீர்திருத்தங்கள் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |