பிள்ளையானின் நெருங்கிய சகாக்கள் உசையின் - ஜெயந்தனால் சிக்கப்போகும் பெரும் புள்ளிகள்
பிள்ளையானிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் குறித்து மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த எட்டாம் திகதி மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து பிள்ளையான் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, கைது செய்யப்பட்டு பலதரப்பட்ட வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மட்டக்களப்பில் உலாவும் பிள்ளையானின் ஆதரவாளர்கள் மற்றும் நெருங்கிய சகாக்கள் மீது குற்றப்புலனாய்வு பிரிவினர் தனது பார்வையினை அண்மையில் செலுத்தியிருந்தனர்.
இதன்தொடர்ச்சியாக கடந்த 18 ஆம் திகதி பிள்ளையானின் சாரதியாகச் செயற்பட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சியால் இயக்கப்பட்ட அலுவலகங்கள் இரகசியமாக கண்காணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலும், பிள்ளையானின் அரசியல் எதிர்காலம் மற்றும் கைதின் முக்கிய காரணி என்பவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
