உண்மையான குற்றவாளிகளை பிடிக்க தவறிய அநுர : எழுந்துள்ள கண்டனம்

Anura Kumara Dissanayaka Sri Lankan political crisis Current Political Scenario
By Shalini Balachandran Apr 21, 2025 08:00 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடைசியாக ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறியுள்ளது என ஊடகவியலாளரும் செங்கலடி தளவாய் வட்டார தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (21) செங்கலடி - புலையவெளி பகுதியில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடைபெற்று ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற மிக மோசமான இந்த பயங்கரவாத தாக்குதலால் சுமார் 260 மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள்.

27 பிரான்ஸ் எம்பிக்களின் விசாக்கள் திடீர் ரத்து : இஸ்ரேல் அதிரடி

27 பிரான்ஸ் எம்பிக்களின் விசாக்கள் திடீர் ரத்து : இஸ்ரேல் அதிரடி

நாடாளுமன்ற பெரும்பான்மை

இன்றுவரை அவர்கள் எதற்காக கொல்லப்பட்டார்கள், ஏன் பலியானார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இன்று ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசினால் உண்மையான குற்றவாளிகளை கண்டுபித்து நீதியின் முன் நிறுத்த முடியவில்லை.

உண்மையான குற்றவாளிகளை பிடிக்க தவறிய அநுர : எழுந்துள்ள கண்டனம் | Nilandhan S Opinion On The Anura Government

கடைசியாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை நடாத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவோம் என கூறி மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தனர்.

அவர்களிடம் ஜனாதிபதி பதவியை கொடுத்துள்ளோம், நாடாளுமன்ற பெரும்பான்மையை கொடுத்துள்ளோம் அதனை வைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியவில்லை.

தற்போது அவர்கள் உள்ளூராட்சி சபையின் அதிகாரங்களை தங்களுக்கு தருமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.  

கனடாவிலுள்ள இந்து கோவில்கள் மீது நடந்த தாக்குதல்

கனடாவிலுள்ள இந்து கோவில்கள் மீது நடந்த தாக்குதல்

அரசுக்கு அழுத்தம்

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தை வைத்து செய்யமுடியாதவர்கள் உள்ளூராட்சி சபைகளை வைத்து என்ன செய்ய போகின்றனர்.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி ஆகி ஒரு வருடங்கள் ஆகிய நிலையில் அவர் இந்த ஆறாவது ஆண்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்திய உண்மையான சூத்திரதாரிகளை கண்டுபிடித்து உலகிற்கு காட்டுவார் என எதிர்பார்த்தோம்.

ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, இதுவரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை.

உண்மையான குற்றவாளிகளை பிடிக்க தவறிய அநுர : எழுந்துள்ள கண்டனம் | Nilandhan S Opinion On The Anura Government

ஏய்தவர்கள் இருக்கும் போது அம்புகளை கைது செய்யும் நிலையே காணப்படுகிறது.

பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ச்சியாக உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை நடத்திய சூத்திரதாரிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இலங்கை கிரிஸ்தவ மக்களை தொடர்ச்சியாக இந்த அரசும் ஏமாற்றி வருகிறது.

தாங்க ஏன் கொல்லப்பட்டோம் எதற்காக கொல்லப்பட்டோம் என்று தெரியாமலே சில குழுக்களின் சில தேவைகளுக்காக பலி கொடுக்கப்பட்ட உயிர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமாக இருந்தால் ஏழாவது உயிர்த்த ஞாயிறு நினைவு தினத்திலாவது இந்த மக்கள் ஏன் கொல்லப்பட்டார்கள், யாரால் கொல்லப்பட்டார்கள் ? யாருக்காக கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை கண்டுபித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ் இறப்பதற்கு முதல் நாள் விடுத்த கோரிக்கை

போப் பிரான்சிஸ் இறப்பதற்கு முதல் நாள் விடுத்த கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி