தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள் - இன்று எடுக்கப்பட உள்ள தீர்மானம்
யாழ். செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.
சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 32 ஆவது நாளுடன் அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
என்புக்கூட்டு தொகுதிகள்
இந்த நிலையில், அகழ்வு பணிகளை மீண்டும் முன்னெடுப்பது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள வழக்கு விசாரணையின் போது தீர்மானிக்கப்படவுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற அகழ்வுப்பணிகளுக்கமைய 147 என்புக்கூட்டு தொகுதிகள் வெளிப்பட்டதுடன், அவற்றில் 133 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, செம்மணி பகுதியில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கு மேலும் 8 வாரக் காலம் தேவைப்படுவதாக நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
