சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டை (NIC) தகவல் உறுதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் ஆட்பதிவுத் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியாவில் உள்ள திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் பெப்ரவரி 14, சனிக்கிழமை காலை 8:30 மணி – 12:30 மணி வரை, பரீட்சார்த்திகளுக்கான NIC தகவல் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கம்
இதேவேளை, உறுதிப்பத்திரங்களை இன்னும் பெறாதோர், ஆட்பதிவுத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.

மேலும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள், அதிபர் அல்லது கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை தொடர்புடைய ஆவணங்களுடன் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |