இலங்கைக்கு எதிராக போராட சுவிஸில் உதயமானது ‘ நிதர்சன்’ அமைப்பு -தென்னிலங்கை ஊடகம் பரபரப்பு தகவல்
இலங்கைக்கு எதிராக எதிர்காலத்தில் போராட சுவிட்ஸர்லாந்தில் பிறந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து நிதர்சன் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
பெசல் நகரை மையமாகக் கொண்ட இந்த அமைப்பு, 'தமிழீழ இளைஞர்' என்ற பெயரில் அடையாள அட்டையை வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.
சுவிட்ஸர்லாந்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்படவில்லை என்பதால், தமிழ் இளைஞர்களை இந்த அமைப்பில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்புக்காக மாதாந்தம் 10 சுவிஸ் பிராங்குகளை மக்களிடம் இருந்து அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது. இலங்கையின் வடக்கில் உள்ள இளைஞர்களும் இந்த அமைப்பில் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த புதிய அமைப்பு விடுதலைப் புலிகளின் புதிய தலைமுறை என ஜெனிவாவில் உள்ள தமிழர் தரப்புத் தகவல்கள் கூறுவதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.