சஜித் பிரேமதாசவிற்கு கொலை அச்சுறுத்தல்..! காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு(sajith premadasa) மரண அச்சுறுத்தல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை என சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று(09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரைக் கொல்லத் திட்டம்
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரைக் கொல்லத் திட்டம் தீட்டப்பட்டதாக தேர்தல் காலத்தில் சில பரப்புரைகள் இடம்பெற்றன.
இது தொடர்பாக புகார் மனுவும் பெறப்பட்டது. புகாரின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்படியொரு கொலைத் திட்டம் எதுவும் வெளியாகவில்லை.
தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு
தேர்தல் நேரத்தில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இப்போது அத்தகைய பாதுகாப்பு தேவையில்லை. அவருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. செய்திகளின் பரிமாற்றம் மட்டுமே உள்ளது. திட்டமிடப்பட்ட நடவடிக்கை இருப்பதாக எந்த தகவலும் இல்லை’’ என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |