வாகன இறக்குமதிக்கு தடை! அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
வாகன இறக்குமதிக்குத் தடை விதிப்பது அல்லது ஏனைய இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று நிதிப் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொருளாதார நடவடிக்கைகளை சுருக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முக்கிய நோக்கம்
நாணய மாற்று விகிதத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தனியார் வாகனங்களுக்கான கொள்முதல் முன்பதிவுகளை வழங்குவதை சில காலத்திற்கு தாமதப்படுத்துவதற்கு மாத்திரமே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்தின் இத்தகைய தலையீடுகள் வெறும் ஊகங்களின் அடிப்படையில் அமையாமல், துல்லியமான தகவல்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |