அமெரிக்காவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ட்ரம்ப்புக்கு எதிரான No Kings போராட்டம்...!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொள்கைகள் மற்றும் அவரது நிர்வாகப் போக்கைக் கண்டித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், நோ கிங்ஸ் (No Kings) என்ற பெயரில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குடியேற்றக் கொள்கைகள்
அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் உள்ள சுமார் 3,300 இங்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் சுமார் 80 லட்சம் (8 million) மக்கள் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நாளில் நடைபெற்ற மிகப்பெரிய அஹிம்சைப் போராட்டமாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு மாதமாகத் தொடர்ந்து வரும் ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்கள், ஐசிஇ (ICE) அமைப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகள் மற்றும் ட்ரம்ப் ஒரு மன்னரைப் போல அதிகாரத்தைச் செலுத்தி ஜனநாயக விழுமியங்களைச் சீர்குலைப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளே இந்தப் போராட்டத்திற்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
முக்கிய நகரங்கள்
மினசோட்டாவின் செயின்ட் பால் (St. Paul) நகரில் நடைபெற்ற பிரதான போராட்டத்தில் பிரபல பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் (Bruce Springsteen) கலந்துகொண்டு பாடல்களைப் பாடித் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மட்டுமின்றி லண்டன், பாரிஸ், பெர்லின் மற்றும் ரோம் போன்ற உலக நாடுகளின் முக்கிய நகரங்களிலும் இந்த 'நோ கிங்ஸ்' போராட்டங்களுக்கு ஆதரவாக ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன.
இதற்கிடையில், இந்தப் போராட்டங்களை ட்ரம்ப் மீதான வெறுப்புப் பிரச்சாரம் (Trump Derangement Therapy Sessions) என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 14 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்