அடிக்கடி தடைப்படும் மின்சாரம் - மின் விநியோகத்தில் பாதிப்பு..! அமைச்சரின் அறிவிப்பு
மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது போதுமான அளவு நீர்மின் உற்பத்தி செய்யப்படுவதால் பாதிப்பில்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இந்தக் கருத்துக்களைத் முன்வைத்துள்ளார்.
அச்சம் கொள்ள வேண்டாம்
அவர் மேலும் தெரிவிக்கையில், நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதால், நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தியை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விரைவில் இரண்டு நிலக்கரி கப்பல்கள் வரவுள்ளதாகவும், முதலாவது கப்பல் நாளை (4) வரவுள்ளதாகவும், இரண்டாவது கப்பல் செப்டம்பர் 12 ஆம் திகதி வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கப்பல்களிலிருந்தும் நிலக்கரி இறக்கப்பட்ட பின்னர், நிலக்கரி மூலம் மேற்கொள்ளப்படும் மின்சார உற்பத்தி வழமைக்குத் திரும்பும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என வலியுறுத்திய அமைச்சர், நிலைமை தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |