எதிர்க்கட்சியினரின் உரிமையை எவராலும் தடுக்க முடியாது - தயாசிறி ஜயசேகர
பெரும்பாலானவர்கள் ஒரே இடத்தில் கூடியிருக்கும் போது எவ்வாறு தொற்று பரவும் என்பதை அனைவரும் அறிவர் ,ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமையை எவராலும் தடுக்க முடியாது என சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வு நேற்று கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற் கொண்டு அதற்கு ஏற்றால் போல் ஏற்பாடுகளை செய்திருக்கலாம். காரணம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவை தொடர்பில் கவனம் செலுத்த முடியாது. எவ்வாறிருப்பினும் எதிர்க்கட்சியினர் என்ற ரீதியில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமையை எவராலும் தடுக்க முடியாது.
நாம் வேறு பயணத்தை ஆரம்பிக்கவில்லை எனவும் கட்சியை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வோம் என தெரிவித்துள்ளார்.
