இனவாதத்தால் வன்முறையைத் தூண்ட எவருக்கும் அனுமதி இல்லை - பிரதமர் திட்டவட்டம்
''இனவாதக் கருத்துக்கள் ஊடாக வன்முறையைத் தூண்ட இந்த நாட்டில் எவருக்கும் இனி அனுமதி இல்லை'' என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இனவாதத்தாலும் வன்முறையாலும் மீண்டும் இங்கு இரத்த ஆறு ஓடக் கூடாது என்பதில் அதிபர் உறுதியாகவுள்ளார் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
“இன, மத பேதமின்றி நாம் செயற்பட வேண்டும், நாட்டின் பிரஜைகள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்
அப்போதுதான் நல்லிணக்கம் இங்கு நிரந்தரமாகும்” எனவும் தெரிவித்துள்ளார்.
தான் வடக்கு, கிழக்குக்குச் செல்லவுள்ளதாகவும், அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்குத் திரும்பவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை காலை நேர செய்தி தொகுப்பில் காண்க.