இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு : வெளியான அறிவிப்பு
இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்த போதிலும், இந்த மாதம் உள்ளூர் எரிபொருள் விலைகளில் திடீர் உயர்வு எதுவும் இருக்காது என்று அந்தக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், உலகளாவிய எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப உள்ளூர் எரிபொருள் விலைகளை மாற்றியமைப்பது குறித்து தற்போது ஆய்வு செய்து வருவதாக அக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
பெட்ரோலின் விலையை குறைத்தல்
இதேவேளை கடந்த 31ஆம் திகதி நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலையை குறைக்க இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 414 ரூபாயிலிருந்து 15 ரூபாயால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 399 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 495 ரூபாயிலிருந்து 20 ரூபாயால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 475 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |