மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட வடக்கு ஆளுநர்!
அண்மையில் ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதநிலைமைகளை நேரடியாக மதிப்பீடு செய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் நேற்று (02.12.2025) மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
நானாட்டான் பிரதேச செயலத்துக்குட்பட்ட அருகம் குண்று, மடுக்கரை உள்ளிட்ட அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களின் நிலை தொடர்பில் நேரில் சென்று அறிந்துகொண்டார்.
இதன்போது, வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், குடிநீர் மற்றும் மின்சாரம் தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் அவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
நிவாரண உதவிகள்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உரையாடிய ஆளுநர் தேவையான நிவாரண உபகரணங்கள் மற்றும் உடனடி உதவிகளை வேகமாக வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மன்னார் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள உதவிகளை வழங்க அரசாங்கம் முழு ஆதரவு வழங்கும் என ஆளுநர் இதன்போது உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

