தமிழர்கள் விடயத்தில் இந்தியா பின்னடிப்பு - சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு
india
tamil people
sivasakthi ananthan
By Vanan
தமிழர்கள் விடயத்தில் இந்தியா இறுக்கமான நடவடிக்கை எடுப்பதற்கு பின்னடிப்பதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்தியா தன் தார்மிக கடமையில் இருந்து விலகி இருக்கின்றதா என்ற கேள்வி எழுவதாக அவர் கூறியுள்ளார்.
தற்பொழுது மேற்கத்தேயம் தமிழ் மக்களுடைய பிரச்சினையை கையாண்டு அதன் மூலம் ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஒரு கடிவாளத்தை போடுவதற்கு யோசிக்கலாம் - ஆனால் மேற்குலகம் மறுபடியும் ஒரே தவறை தான் மறுபடி செய்கின்றது.
அனைத்து தமிழ் தரப்புடனும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தி அதற்குரிய செயற்திட்டங்களை வகுக்காமல், தனியே கூட்டமைப்புடன் ராஜபக்ச அரசாங்கம் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்கள் என சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளார்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி