கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு அவசர அறிவிப்பு
சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் விமானப் பயணிகளுக்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் தற்போது வெள்ள அபாயத்திற்கு முகம் கொடுத்துள்ளதுடன், விமான நிலையத்திற்கு செல்லும் பெரும்பாலான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன.
இதனால், விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்களது விமானப் பயண நேரத்திற்கு சுமார் 04 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள்
இதற்காக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை இயன்றளவு பயன்படுத்துமாறு விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலுள்ள நய்கந்த பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், கோவின்ன பகுதியும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே இப்பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் தங்களது பயணங்களைத் தடையின்றி மேற்கொள்வதற்கும் தேவையற்ற தாமதங்களைத் தவிர்ப்பதற்கும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு ஓட்டுநர்கள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |