இரத்து செய்யப்படவுள்ள சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Driving Licence
By Shalini Balachandran Aug 22, 2024 02:25 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வது தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களமோ அல்லது அரசாங்கமோ எந்தவொரு தீர்மானத்தினையும் எடுக்கவில்லை என அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விரசிங்க (Nishantha Anurudtha Wirasinghe) தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாரதிகள் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தயாராகி வருவதாக வெளியான செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், போக்குவரத்து அமைச்சுடன் ஆலோசித்து சாலை பாதுகாப்பு தொடர்பான சூழ்நிலையை கருத்தில் கொண்டு சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு கருப்பு மதிப்பெண் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு திட்டம் : வெளியான தகவல்

பாடசாலை மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு திட்டம் : வெளியான தகவல்

புதிய முறை

அதன்படி, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இந்த புதிய முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

இரத்து செய்யப்படவுள்ள சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | Notification Department Regarding Driving Licences

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "புதிய முறையின் மூலம் சாரதியொருவர் போக்குவரத்து விதிமீறலைச் செய்த பிறகு போக்குவரத்து காவல்துறையினர் வழங்கும் பற்றுசீட்டுக்கு ஏற்ப அபராதத் தொகையை ஒரே நேரத்தில் செலுத்த டிஜிட்டல் சிஸ்டம் தயார் செய்யப்பட்டு அந்த விதிமீறலுக்கான அபராதப் புள்ளிகள் சாரதி அனுமதிப்பத்திரத்தில் சேர்க்கப்படும்.

தெற்கு அதிவேக வீதியில் பயங்கர விபத்து : விசேட வைத்திய நிபுணரின் குடும்பம் படுகாயம்

தெற்கு அதிவேக வீதியில் பயங்கர விபத்து : விசேட வைத்திய நிபுணரின் குடும்பம் படுகாயம்

ஓட்டுநர் உரிமம்

இந்த முறையின் கீழ் 24 கருப்பு புள்ளிகளை எட்டியதும் ஓட்டுநர் உரிமம் இரத்து செய்யப்படும்.

இரத்து செய்யப்படவுள்ள சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | Notification Department Regarding Driving Licences

இவ்வாறு இரத்து செய்யப்படும் ஓட்டுநர் உரிமத்தை திரும்பப்பெற ஒரு ஓட்டுநர் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

இலங்கையில் நாளொன்றுக்கு ஏழு பேர் நெடுஞ்சாலை விபத்துகளில் உயிரிழப்பதாலும் வீதி விபத்துக்களினால் அங்கவீனர்களாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் நெடுஞ்சாலைகளில் ஒழுக்கத்தை ஏற்படுத்த இந்த முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வைத்தியசாலைகளில் தொடரும் அசமந்த போக்கு: சிறுவனுக்கு நேர்ந்த அநீதி

இலங்கை வைத்தியசாலைகளில் தொடரும் அசமந்த போக்கு: சிறுவனுக்கு நேர்ந்த அநீதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025