வெளிநாட்டு வேலைவாய்ப்பு : npp வேட்பாளரின் மகன் மற்றும் மருமகள் கோடிக்கணக்கில் மோசடி : சாமர எம்.பி பகிரங்கம்
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் குழு, ஜப்பானில் வேலை வழங்குவதாகக் கூறி, அப்பாவி மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார்.
தேசிய மக்கள் சக்தியின் தலங்கம பிரிவுக்குப் போட்டியிட்ட லீலரத்ன நாரதவின் மகனும் மருமகளும் (சுதர்மிகா பிலோனி) ஜப்பானுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி இந்த மோசடியை நடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
ஒவ்வொருவரிடமிருந்தும் ரூபாய் 2 மில்லியன் மோசடி
ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 2 மில்லியன் ரூபாய் பெறப்பட்டதாகவும், கண்டி பகுதியில் உள்ள ஒரு குழு தங்கள் வீடுகளை அடமானம் வைத்து இந்தப் பணத்தை செலுத்தியதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சுதர்மிகா பிலோனியின் திருமணச் சான்றிதழில் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கையெழுத்திட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சபையில் ஆவணங்களை சமர்ப்பித்தார்.
மேலும், ஜா-எல நகராட்சி மன்றத்திற்கு 52 ஆண்டுகளாகச் சொந்தமான 'செக்குவத்த' விளையாட்டு மைதானம் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்த விளையாட்டு மைதானம் ஒரு தனிநபருக்குச் சொந்தமானது என்றும், அந்த நபருக்கு ரூ. 190 மில்லியன் பொது நிதியை வழங்கத் தயாராகி வருவதாகவும், இது ஒரு "அப்பட்டமான திருட்டு" என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம்
பல ஆண்டுகளாக நகராட்சி மன்றத்தின் கீழ் இருக்கும் விளையாட்டு மைதானத்திற்கு பணம் செலுத்தும் இந்த முயற்சியின் பின்னணியில் ஒரு பெரிய மோசடி இருப்பதாக அவர் கூறினார்.

திருடர்கள் என்று அவர் குற்றம் சாட்டும் நபர்கள் இதுபோன்ற மோசடிகளைச் செய்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரையும் பிரதமரையும் கேட்டுக்கொண்டார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், தனக்கு ஓய்வூதியம் தேவையில்லை என்றும், தொடர்புடைய திருத்தம் தனது தனிப்பட்ட நலனுக்காக முன்வைக்கப்படவில்லை என்றும் கூறினார்.
சட்டத்தை அமல்படுத்தும்போது, அது கையெழுத்திடப்பட்ட திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 நாட்கள் முன்