ரணிலின் வழியில் செல்லும் அனுர அரசாங்கம் : மக்கள் ஏமாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தை 2024 இல் அவர் விட்டுச்சென்ற இடத்திலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது என்று முன்னணி சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்னம் குறிப்பிட்டுள்ளார்.
76 ஆண்டுகால உயரடுக்கு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து பொது மக்களின் அரசாங்கத்தை நிறுவ மக்கள் உழைத்த போதிலும், அந்த நம்பிக்கைகள் இப்போது சிதைந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அரசாங்கத்தை கேலி செய்யும் முன்னாள் ஆட்சியாளர்கள்
மேலும் முன்னாள் ஆட்சியாளர்கள் எந்த மாற்றங்களும் இல்லாமல் தமது திட்டத்தைத் தொடரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கேலி செய்கிறார்கள்.

அதன்படி, அனைத்து கட்சிகளும் முதலாளித்துவ அமைப்புடன் இணையும் போது, முன்னணி சோசலிசக் கட்சி மேல்நோக்கிச் செல்லத் தயாராக உள்ளது என்றும், அதை மக்களுடன் இணைந்து வழிநடத்தக்கூடிய ஒரு கட்சியை அது உருவாக்கி வருவதாகவும் குமார் குணரத்னம் வலியுறுத்துகிறார்.
முன்னணி சோசலிசக் கட்சியின் 4வது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு கூறினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு : npp வேட்பாளரின் மகன் மற்றும் மருமகள் கோடிக்கணக்கில் மோசடி : சாமர எம்.பி பகிரங்கம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 நாட்கள் முன்