சொகுசு வாழ்க்கை வாழும் அநுர அரசாங்கம் : ரணில் குற்றச்சாட்டு
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும், வாழ்க்கைச் செலவு விண்ணைத் தொட்டுள்ள நிலையில் ஆளும் தரப்பினர் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (01) மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நடத்தப்படும் மே தினக் கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில், நிலக்கரி மோசடி மற்றும் மத்திய திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்டமை ஆகியவை அண்மைய காலத்தின் பாரிய ஊழல்கள்.
மாகாண சபைத் தேர்தல்கள்
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியினர் குரல் எழுப்ப இடமளிக்கப்படாமல் அச்சுறுத்தல்கள் மூலம் ஆட்சி நடத்தப்படுகின்றது. தோல்வி பயத்தினால் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் இம்முறை மே தினத்திற்காகத் தெரிவு செய்துள்ள உருட்டு, பிரட்டு, திருட்டு என்ற வாசகம் தற்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானது. இந்த வாசகத்தை உள்ளூராட்சி சபைகள் ஊடாக அடிமட்ட மக்கள் வரை கொண்டு செல்ல வேண்டும்.
பௌத்த உரிமைகள் மீறப்படுவதுடன், கத்தோலிக்க திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நீண்டகால மரபுகள் மீறப்படுகின்றது.
இணைந்து பயணித்தல்
1977 ஆம் ஆண்டு முதல் ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தற்போது முடங்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பயணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |