உயிருக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் நோயாளிகள் தொடர்பில் வைத்தியர்கள் எச்சரிக்கை
சுகாதார ஊழியர்களில் 5% முதல் 10% வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சுகாதார ஊழியர்களிடமிருந்து சமூகத்திற்குள் கொரோனா பரவ முடியும் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நோயாளிகளின் உயர்வு, குறிப்பாக ஒட்சிசனை நம்பியிருப்பவர்கள், மக்களின் உயிருக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகின்றனர்.
உதாரணமாக, நேற்று (23) மட்டும் இதுபோன்ற 306 நோயாளிகள் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்மூலம் ஒட்சிசனை நம்பியிருப்போரின் தொகை 50% அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு நபருடன் மற்றொரு குடும்ப உறுப்பினரை தங்க வைத்திருப்பது நோய் பரவுவதற்கு வழிவகுக்கும்.
இதேவேளை, வீட்டில் உள்ள நோயாளிகள் குணமடைய அதிகபட்சம் 2-3 வாரங்கள் ஆகும்.
இது முழு குடும்பமும் கொரோனாவால் பாதிக்கும் அபாயத்தை உருவாக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சித்துள்ளனர்.