மழைக்கு மத்தியில் காட்டு யானைகளை அப்புறப்படுத்திய அதிகாரிகள்
மட்டக்களப்பு - பெரியபோரதீவு பட்டிருப்பு பிரதான வீதியருகிலுள்ள சதுப்பு நிலப்பரப்பினுள் சஞ்சரித்து நின்ற காட்டு யானைகளை வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினர் அப்புறப்படத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இன்று (20.10.2025) மூன்று காட்டு யானைகள் சஞ்சரித்து நிற்பதை அவதானிக்க முடிந்துள்ளது.
இந்நிலையில் வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினர் அப்பகுதிக்கு வருகைதந்து அங்கிருந்து குறித்த காட்டுயானைகளை கட்டுப் பகுதிக்குள் அனுப்பி வைப்பதற்குரிய பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி நகர்பகுதி
இந்தக் காட்டுயானைக் கூட்டம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக களுவாஞ்சிக்குடி நகர்பகுதியை அண்மித்த பகுதிகளில் உணவுதேடி சுற்றித்திரிந்து மக்களையும் அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பல்வேறு பிரயேத்ததனங்களுக்கு மத்தியில், உயிர் அச்சுறுத்தல்களுடன் வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினர் காட்டு யானைக் கூட்டத்தை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.




