62 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார் முதியவர்
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சத்னா மாவட்டம் அதர்வேடியா குர்த் கிராமத்தை சேர்ந்த 62 வயதான முதியவர் ஒருவர் மூன்று குழந்தைகளுக்கு தந்தையாகி உள்ளார்.
கோவிந்த் குஷ்வாகா (வயது 62), என்ற முதியவரே இவ்வாறு தந்தையானவராவார்.
இவருக்கு கஸ்தூரி பாய் (60) என மனைவி உள்ளார்.இவர்களது 18 வயது மகன் விபத்தொன்றில் உயிரிழந்தார். எனவே குழந்தையின்றி இந்த தம்பதியினர் தவித்தனர்.
இரண்டாவது திருமணம் செய்ய வற்புறுத்திய மனைவி
இந்நிலையில் கஸ்தூரிபாய் தனது கணவர் கோவிந்திடம் 2 ஆவது திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். அதன்படி கோவிந்த், ஹீராபாய் (30) என்ற பெண்ணை 2 ஆவது திருமணம் செய்தார். திருமணமாகி 6 வருடங்களுக்கு பின்னர் கர்ப்பம் அடைந்த ஹீராபாய்க்கு கடந்த 12 ஆம் திகதி இரவு பிரசவ வலி ஏற்பட்டது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஹீராபாய்க்கு அடுத்த நாள் காலை அறுவை சிகிச்சை மூலம் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்தார். அந்த குழந்தைகள் பலவீனமாக இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
