துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!
Sri Lanka Police
Shooting
Sri Lanka Police Investigation
By Kiruththikan
துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குருநாகல் – மாவத்தகம, பரகஹதெனிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
பரகஹதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை மாவத்தகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்று காவல்துறை ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.