வெள்ளவத்தை கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Kiruththikan
வெள்ளவத்தை கடலில் நீராடிய ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று (24) வெள்ளவத்தை ரயில் நிலையத்தை அண்டிய கடலி ல் நீராடியபோதே குறித்த நபர் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நுவரெலியா – வஜிரபுர பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளவத்தை காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்