தொடரும் இந்திய கடற்றொழிலாளர்களின் அடாவடி! மௌனம் காக்கும் அமைச்சர்
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை தொடர்பாக நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த போதும் இந்த அரசாங்கமும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கவலை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக கடற்றொழில் அமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் நினைத்திருந்தால் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்தி இருக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அடாவடி நடவடிக்கை
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபடுகின்ற தமிழக கடற்றொழிலாளர்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்க விடையமாக உள்ளது.
குறித்த விடயத்தை யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை.
தொடர்ச்சியாக இந்திய கடற்றொழிலாளர்களின் வருகையும், அடாவடித் தனமும், வட பகுதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கடற்றொழில் அமைச்சர் குறித்த விடையத்தில் மௌனமாக இருக்கின்றார்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 1 மணி நேரம் முன்