ஈஸ்டர் சூத்திரதாரியை கண்டுபிடிக்க சர்வதேச விசாரணை : சஜித் கோரிக்கை

Easter Sajith Premadasa Sri Lanka Sri Lankan Peoples Easter Attack Sri Lanka
By Dilakshan Sep 05, 2023 04:10 PM GMT
Report

இலங்கையில் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை உள்ளக விசாரணை மூலம் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாதென்பதால் சர்வதேச விசாரணை ஒன்றே அவசியம் என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் இன்றிரவு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆவணப்பதிவு ஒளிபரப்ப உள்ள நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இந்தவிடயம் அலசப்பட்ட போதே சஜித் பிரேமதாசவின் இந்தக்கருத்து கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் நான். அதிபர் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு கர்தினால் கோரியிருந்தார்.

இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட மகன் சிறைக்குள் - கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ள தந்தை

இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட மகன் சிறைக்குள் - கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ள தந்தை


வெளிநாட்டு விசாரணை

கர்தினால் மாத்திரமல்ல, கத்தோலிக்க மக்கள், இந்த நாட்டு மக்கள், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.

ஈஸ்டர் சூத்திரதாரியை கண்டுபிடிக்க சர்வதேச விசாரணை : சஜித் கோரிக்கை | Only International Inquiry Is Necessary Sajith

எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் பொறுப்புகூற வேண்டியவர்களை கண்டறியுமாறு வெளிநாட்டு விசாரணையில் வெளிநாட்டு ஊடகத்தில் எமது நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கூறுவது வெட்கக் கேடானது

இதற்கு எமக்கு வெளிநாட்டின் ஆலோசணை தேவையா? இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு உண்மையை கண்டறிவதற்கும் உண்மையை பேசுவதற்கும் திராணி இல்லையா? கர்தினால் அந்நேரத்தில் எனக்கு எதிராக வாக்களிக்க கூறியமை தொடர்பாக நான் வருத்தப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட வலிதான் அதற்கு காரணம். அதே வலி இன்றும் கத்தோலிக்க சமூகத்தில் இருக்கின்றது. கர்தினால் மற்றும் கத்தோலிக்க சமூகத்தை அவமதிக்காமல், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற பிரதான சூத்திரதாரி குறித்து இந்த நாட்டில் விசாரணை செய்து தீர்க்க முடியாது.

யாழ். வைத்தியசாலை விவகாரம்: உண்மைகளை வெளியிட்ட முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி

யாழ். வைத்தியசாலை விவகாரம்: உண்மைகளை வெளியிட்ட முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி


சர்வதேச விசாரணை

இது தொடர்பாக முறையான சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். கர்தினாலுக்கும் கத்தோலிக்க மக்களுக்கும் கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்த வேண்டாம்.

ஈஸ்டர் சூத்திரதாரியை கண்டுபிடிக்க சர்வதேச விசாரணை : சஜித் கோரிக்கை | Only International Inquiry Is Necessary Sajith

அவர்களுக்கு மனதில் வேதனை இருக்கின்றது.இவர்களுக்கு அதிகாரத்திற்கு வருவது தொடர்பான வேதனையே இருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முதலை கண்ணீர் வடித்து ஆட்சிக்கு வந்தனர்.

சபாநாயகரான நீங்கள் உட்பட ஆளும் தரப்பிலுள்ள அனைவரும் அப்போது தேர்தல் மேடைகளில் இதையே பேசினீர்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து நீங்கள் கதைக்கவில்லையா? இவர்கள் கதைக்கவில்லையா? வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவில்லையா?

ஆகவே கர்தினால் , கத்தோலிக்க மக்கள் மற்றும் கத்தோலிக்க மதகுருமார்களை மேலும் அவமதிக்காமல், உடனடியாக முறையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.

கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் 33 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் 33 ஆவது நினைவேந்தல் நிகழ்வு


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025