கனடாவில் ஆயிரக்கணக்கானோருக்கு காத்திருக்கும் உடனடி வேலைவாய்ப்பு
சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு கனடாவின் ஒன்ராறியோ மாகாண சுகாதார துறை அழைப்பு விடுத்துள்ளது.
மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் இத்தகைய பணியாளர்களை உடன் பணிக்கமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், ஒன்ராறியோவில் 6,000 சுகாதாரத் துறை பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
இதனை நிவர்த்திசெய்ய செவிலியர் பயிற்சி பெறும் மாணவிகள், மருத்துவப் பயிற்சி பெறும் மாணவர்கள் மற்றும் பிற மருத்துவத்துறை நபர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க மாகாண சுகாதார துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு தெரிவு செய்யப்படும் செவிலியர்களில் சுமார் 300 பேர் மாகாணத்தில் அதிக தேவையிலுள்ள 50 மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
மேற்பார்வையின் கீழ் நோயாளிகளை அவர்கள் கவனித்துக்கொள்ளும் அதே நேரத்தில், ஒன்ராறியோவில் அவர்கள் பணி உரிமம் பெறுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக, மருத்துவமனைகளில் காணப்படும் செவிலியர் முதலான பணியாளர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க கனேடிய அரசு பெரும் தொகை நிதியை ஒதுக்க இருப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.