உலகையே மிரளவைத்த சோவியத் ரஷ்யாவின் பதிலடி
ஹிட்லரின் வெறி
ஒரே அடியில் சோவியத் ரஷ்யாவை வீழ்த்தவேண்டும். இது ஹிட்லரின் நெடுநாளைய ஆசை.
1940ஆம் ஆண்டு ஜீலை மாதம் 31ஆம் திகதி ஒரு இராணுவச் சந்திப்பின்போது தனது இந்த விரும்பத்தைத் தெரிவித்தார் ஹிட்லர். அது ஹிட்லரின் விருப்பம் மாத்திரமல்ல அது ஹிட்லரின் வெறி.
கம்யூனிசத்தின் ஆணி வேரையே பிடுங்கி எறிய வேண்டும். சோவியத் என்கின்ற ஒரு தேசம் இருந்ததற்கான அடையாளமே இருக்கக்கூடாது. முற்றாகவே துடைத்தெறியவேண்டும். ஹிட்லரின் தீராத ஆசை இது.
சோவியத்தை கபளீகரம் செய்துவிடும் நோக்கத்தில் சோவியத்திற்குள் அனுப்பப்பட்ட ஜேர்மனிய படையினருக்கு ஒரு விடயத்தைச் செல்லியனுப்பியிருந்தார் ஹிட்லர்.
வரலாற்றில் இதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு பிரமாண்டமான படையெடுப்பு நடைபெறவில்லை என்று உலகம் சொல்லவேண்டும் என்பதே அது.
வாழ்வா..! சாவா..!
உண்மையிலேயே யுத்தம் என்கின்ற ஒரு விடயத்தை அந்தக் காலகட்டத்தில் சோவியத் ரஷ்யா சிறிதும் விரும்பவில்லை. ஆனால், ஒரு யுத்தம் வாசல்படி தாண்டி வந்துவிட்ட பின்னர் என்ன செய்வது?
ஒன்று வாழ்வுக்காகப் போராட வேண்டும். அல்லது வாழ்க்கையை இழந்து மரணிக்கவேண்டும். வாழ்வா அல்லது சாவா? எனும் தருணத்தில் சோவியத் அதிபர் ஜோசப் ஸ்டாலின் வாழ்வதற்காகப் போராடும் முடிவுக்கு வந்திருந்தார்.
இவ்வாறு - இதுவரை உலகம் கண்டிராததும், இனியும் காணமுடியாததுமான மிகப் பெரிய சண்டைக்களங்களையும், வீர காவியங்களையும் கொண்ட ஜேர்மன் - சோவியத் யுத்தம் பற்றி, மனிதர்களின் பிணத்தை உண்டபடி, சோவியத் வீரர்கள் புரிந்த சண்டைகளின் களங்கள் தொடர்பில் தான் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சிகளில் நாம் விரிவாக பார்க்க இருக்கின்றோம்.