உதயநிதி கைதால் வெடித்த போராட்டம் - ஓ.பன்னீர்செல்வம் குண்டுக்கட்டாக கைது
தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக முதல்வர் விஜய்யை தரக்குறைவாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் காவல்துறையின் கைது நடவடிக்கையை காமெடியாகப் பார்ப்பதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தவெக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் , அவதூறாக பேசியதாக, தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
குண்டுக்கட்டாக கைது
இந்த கைதுக்கு எதிராக உதயநிதி வீட்டின் முன்பு ஏரளமான தி.மு.க-வினர் தர்ணாவில் ஈடுபட்டார்கள் சாலையில் அமர்ந்து போராடியவர்களை தற்போது காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுக சாலை மறியல்களை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |