சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடம்! பௌத்த மதகுருவின் வீட்டை இடிக்க உத்தரவு
தொடருந்து காப்புப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீட்டை காலி செய்யுமாறு பௌத்த மதகுரு ஒருவருக்கு அத்தனகல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறிப்பிட்ட மாதத்திற்குள் அந்த இடம் அகற்றப்படாவிட்டால், அந்த இடத்தை இடித்துவிட்டு, குற்றம் சாட்டப்பட்ட துறவியிடமிருந்து செலவை அறவிடுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதி மஞ்சுள கருணாரத்னவினால் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து காப்புப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீட்டை காலி செய்யுமாறு ஒரு துறவிக்கு உத்தரவிட்டார்.
தொடருந்து காப்புப் பகுதி
மீரிகம விஜய ராஜதஹன பகுதியில் உள்ள தொடருந்து காப்புப் பகுதியில் வீடு கட்டியுள்ள கே. சிறிவிமல என்ற துறவிக்கு எதிராக தொடருந்து பாதுகாப்புப் பிரிவு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது.
இதன்படி இந்த வழக்கு முன்பு அழைக்கப்பட்டபோது, சம்பந்தப்பட்ட துறவி இரண்டு மாதங்களுக்குள் கட்டுமானத்தை அகற்றுவதாக நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (25) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் முன்னிலையான தொடருந்து பாதுகாப்புப் பிரிவின் துணை ஆய்வாளர் பிரியந்த நந்தனதிலக்க, வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட துறவி
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட துறவியின் சார்பில் முன்னிலையான சட்டத்திரணி, எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் கதின பூஜை விழா காரணமாக அவர் விலக முடியாது என்று கூறி கூடுதல் கால அவகாசம் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றும், மத விடயங்களின் அடிப்படையில் சட்டத்தை மீற முடியாது என்றும் வலியுறுத்தினார்.
குறிப்பிட்ட மாதத்திற்குள் அந்த இடம் அகற்றப்படாவிட்டால், அந்த இடத்தை இடித்துவிட்டு, குற்றம் சாட்டப்பட்ட துறவியிடமிருந்து செலவை வசூலிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு ஓகஸ்ட் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
