சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தம் - பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
நடைபெற்று முடிந்த 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பில் பரீட்சைகள் திணக்களம் அறிவித்தலை விடுத்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலை விடுமுறை தினத்தன்று விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
100 மதிப்பீட்டு நிலையங்களில்

இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 100 மதிப்பீட்டு நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் லசிக சமரகோன் தெரிவித்தார்.
“இந்த பரீட்சைக்காக 472,554 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர். அவர்களின் சுமார் 2.6 மில்லியன் விடைத்தாள்கள், அதாவது 90 வீதமானவை, இந்த முதற் கட்டத்தில் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
27,500 ஆசிரியர்கள்

27,500 ஆசிரியர்கள் இதற்கான பணிகளில் ஈடுபடவுள்ளனர். எனவே, மதிப்பீட்டு நடவடிக்கைகள் காரணமாக எந்த பாடசாலையும் மேலதிகமாக மூடப்படாது. அதன்படி, 56 நகரங்களில் உள்ள 100 மதிப்பீட்டு நிலையங்களில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன" என்றார்.