கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை : ஒட்டாவா காவல்துறை செய்த மிகப்பெரிய தவறு

Sri Lanka Canada Ottawa
By Sumithiran Mar 12, 2024 02:31 PM GMT
Sumithiran

Sumithiran

in கனடா
Report

கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், ஒட்டாவா காவல்துறை பல தவறான தகவல் தொடர்புகளை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கனேடிய ஒலிபரப்புக் கழகம் (சிபிசி) இது தொடர்பான தகவலை இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவாவின் தலைநகருக்கு அருகில் உள்ள Barrhaven இல் உள்ள வீட்டில் இலங்கைத் தாயும் அவரது நான்கு குழந்தைகளும் மற்றுமொரு இலங்கை ஆணும் கொல்லப்பட்டதுடன் பெண்ணின் கணவர் படுகாயமடைந்தார்.

பாரிய துப்பாக்கிச்சூடு

ஒட்டாவாவின் சமீபத்திய வரலாற்றில் இது மிக மோசமான படுகொலையாகும், மேலும் ஒட்டாவா காவல்துறை உண்மைகளை வெளிக்கொண்டுவருதில் பல தவறுகளை செய்துள்ளது.

கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை : ஒட்டாவா காவல்துறை செய்த மிகப்பெரிய தவறு | Ottawa Police Were Wrong In The Canada Murder Case

ஒட்டாவா காவல்துறையினர் செய்த முதல் தவறு இந்த சம்பவத்தை பாரிய துப்பாக்கிச்சூடு என்று முதலில் அழைத்தது என்று கனடியன் பிராட்காஸ்டிங் கோப்பரேஷன் தெரிவித்துள்ளது.

பின்னர், இது கூரிய ஆயுதத்தால் செய்யப்பட்ட கொலை என்று ஒட்டாவா காவல்துறையினர் சரி செய்தனர்.

பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இந்த சம்பவம் நடந்து ஒட்டாவா நேரப்படி இரவு 10:52 மணிக்கு அவசர சேவைக்கு அறிவிக்கப்பட்டதாக காவல்துறையினர் முதலில் தெரிவித்தனர். எனினும் சந்தேகநபர் இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

கொலைச் சந்தேக நபரின் பெயரில் குளறுபடி

காவல்துறையினர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 வயதுடைய சந்தேகநபரின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டமை பாரிய தகவல் தொடர்பு பிழை எனவும் சிபிசி செய்திச் சேவை கூறுகிறது.

கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை : ஒட்டாவா காவல்துறை செய்த மிகப்பெரிய தவறு | Ottawa Police Were Wrong In The Canada Murder Case

சந்தேக நபரின் பெயர் Fabrio de Soyza என்ற போதிலும், Ottawa காவல்துறை தலைமை அதிகாரி Eric Stubbs அவரை Frank D'Souza Leste என அடையாளப்படுத்தினார்.

தமிழச்சியின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி

தமிழச்சியின் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி

மேலும், இறந்தவர்களின் பெயர் பட்டியலை மூன்று முறை சரி செய்து, மூன்றாவது மின்னஞ்சல் செய்தியில் இருந்து இறுதி பெயர் பட்டியல் பெறப்பட்டது. இந்த தவறுகளை ஒப்புக்கொண்ட ஒட்டாவா காவல்துறையினர், கொலை விசாரணைகள் மிகவும் சிக்கலானது என்றும், அவ்வப்போது தகவல்கள் மாறுவதாகவும் கூறியுள்ளனர்.

காவல்துறையின் திறமையின்மை 

பிராண்டன் பல்கலைக்கழக குற்றவியல் பேராசிரியர் கிறிஸ்டோபர் ஸ்னைடர், தவறான தகவல்தொடர்பு காவல்துறையின் திறமையின்மை பற்றிய பொதுக் கருத்தை உருவாக்குகிறது என்று சிபிசி நியூஸ் இற்கு மேற்கோள் காட்டினார்.

கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை : ஒட்டாவா காவல்துறை செய்த மிகப்பெரிய தவறு | Ottawa Police Were Wrong In The Canada Murder Case

இது காவல்துறை மீதான நம்பிக்கையை கெடுக்கும் என்று பேராசிரியர் மேலும் குறிப்பிடுகிறார்.

புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் காவல்துறையின் இந்த தகவல் தொடர்பு பலவீனம் குறிப்பாகத் தெரியும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அடங்காத ஹவுதி கிளர்ச்சியாளர்கள் : செங்கடலில் அமெரிக்க கப்பல் மீது தாக்குதல்

அடங்காத ஹவுதி கிளர்ச்சியாளர்கள் : செங்கடலில் அமெரிக்க கப்பல் மீது தாக்குதல்

இதேவேளை, இலங்கை குடும்பத்தாரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில், வேட்டையாடும் கத்திக்கு நிகரான கத்தியே கொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஒட்டாவா காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு கத்தியா அல்லது பல கத்திகள் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது தற்போது விசாரணையில் உள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைவடைகிறது பால்மாவின் விலை

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைவடைகிறது பால்மாவின் விலை

படுகொலைச் சம்பவத்தின் சந்தேக நபரான 19 வயதான இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா எதிர்வரும் வியாழக்கிழமை ஒட்டாவா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி