எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தயார்: நுகேகொடை மேடையில் சூளுரைத்த நாமல் ராஜபக்ச!

SLPP Mahinda Rajapaksa Namal Rajapaksa Nugegoda Rally
By Kanooshiya Nov 21, 2025 12:23 PM GMT
Report

வரலாற்றில் முதல் தடவையாக உள்ளுர் உற்பத்திகளை தவிர்த்து வெளிநாட்டு இறக்குமதியே சிறந்தது எனக் கூறும் அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் தற்போது நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  

அரசாங்கம் தனது வாக்குறுதிகளை மறந்து தற்போது ஆட்சியமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் நாமல் உரையாற்றும்போது கலைந்துசென்ற ஆதரவாளர்கள்

நுகேகொடையில் நாமல் உரையாற்றும்போது கலைந்துசென்ற ஆதரவாளர்கள்


பொய்யான ஆட்சி

பொய் கூறுவதை நிறுத்திவிட்டு, முறையாக மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்காவிடின் எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தாயாராக உள்ளதாக நாமல் ராஜபக்ச அடித்துரைத்துள்ளார்.

எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தயார்: நுகேகொடை மேடையில் சூளுரைத்த நாமல் ராஜபக்ச! | Overthrow The Government Namal Rajapaksha

இதன்போது மேலும் உரையாற்றிய நாமல், 

“தேர்தல்கள் நோக்கங்களின்றி வாக்குகளுக்காக அல்லாமல், இப்படி அவசரமாக ஒன்று கூட காரணம் என்ன என பலரும் கேட்கின்றனர். தனிப்பட்ட நோக்கங்கள் அல்ல. மக்களை பிரதிநிதித்துவப்படுத்த நாங்கள் தயார் என்ற செய்தியை வழங்கவே நாங்கள் ஒன்று கூடியுள்ளளோம்.

பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்தனர். ஐ.எம்.எப் (IMF) வீட்டுக்கு அனுப்புவதாக கூறிய அரசாங்கம் வந்தவுடன் அதனை அரவணைத்துக் கொண்டது.

வாக்குறுதிகளை நினைவுகூரவே நாங்கள் கூடியுள்ளோம் தயவு செய்து பொய்கள் கூறுவதை நிறுத்தி விடுங்கள். பொதுமக்களுக்காக சேவை செய்ய ஆரம்பியுங்கள்.

நீதித்துறைக்கு அரசாங்கம் அச்சுறுத்தி வருகிறது. காவல்துறை ஆணைக்குழுவுக்கும் அச்சுறுத்தல் விடுத்து வருகிறது. அரசாங்கத்திற்கு உடந்தையாக இருக்காமல் மக்களுக்காக சேவை செய்யுமாறு, அரசாங்க பணியாளர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.

புலமை பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

புலமை பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

அரசாங்கத்தின் உறுதிமொழி

மக்களுக்கு வழங்கிய உறுதிகளை வழங்க முடியாது விடின், பாதுகாப்பு படைகளை அதற்கு காரணமாக பயன்படுத்தாதீர்கள்.

அன்று விவசாயிகளுடன் வயலுக்கு இறங்கியவர்கள் இன்று விவசாயிகளை கண்டுக்கொள்வதேயில்லை.

வரலாற்றில் முதல் தடவையாக உள்ளுர் உற்பத்திகளை விடவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது சிறந்தது எனக் கூறும் அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது.

அரிசி மாஃபியாவை நிறுத்துவதாகக் கூறிய அரசாங்கம் அதற்கு தீர்வு வழங்கவில்லை.

போதைப்பொருள் ஒழிப்பிற்கு நாங்கள் ஒன்றும் விரோதமானவர்கள் அல்ல. எனினும், சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலகன் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பியுங்கள், என நினைவுகூர விரும்புகின்றோம்.” என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தயார்: நுகேகொடை மேடையில் சூளுரைத்த நாமல் ராஜபக்ச! | Overthrow The Government Namal Rajapaksha

ஜனாதிபதி அறுரகுமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் இணைந்து மாபெரும் மக்கள் குரல் எனும் கருப்பொருளின் கீழ் இன்று (21.11.2025) பொதுப் பேரணியொன்று நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பல அரசியல் பிரமுகர்களும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நுகேகொடையில் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி : நன்றி தெரிவித்த நாமல்!

நுகேகொடையில் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி : நன்றி தெரிவித்த நாமல்!

தங்காலையில் கூட்டம் நடத்தும் போது பரீட்சை கண்ணுக்கு தெரியவில்லையா: ஜனாதிபதியிடம் கேள்வி!

தங்காலையில் கூட்டம் நடத்தும் போது பரீட்சை கண்ணுக்கு தெரியவில்லையா: ஜனாதிபதியிடம் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021