அறுவடைக்குத் தயாராகும் விவசாயிகளுக்கு நற்செய்தி!
நாட்டிலுள்ள விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கான அனைத்து அத்தியாவசிய ஏற்பாடுகளையும் அரசாங்கம் நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (06-02-2026) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நெல் களஞ்சியசாலைகள்
நெல் களஞ்சியசாலைகள் திறப்பு பெரும்பாலான மாவட்டங்களில் நெல் களஞ்சியசாலைகள் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், எதிர்பார்க்கப்படும் அறுவடை அளவுகளுக்கு ஏற்ப எதிர்கால நடவடிக்கைகள் முறையாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த பருவத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்புகளை முறையாக அரிசியாக மாற்றி சந்தைக்கு விடுவிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இன்றைய நிலவரப்படி, பெரும்பாலான மாவட்டங்களில் நெல் களஞ்சியசாலைகளைத் திறந்துள்ளோம்.
சந்தைக்கு விநியோகம்
அறுவடை வரத்துக்கேற்ப எமது செயற்பாடுகளைத் திட்டமிட்டுள்ளோம்.
அத்துடன், முந்தைய பருவத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம்.

நெல் கொள்வனவு செயல்முறைகள் தொடங்கப்பட்டு, தேவையான களஞ்சிய வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.
எனவே, இனிவரும் காலங்களில் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |