பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள முடிவு
பொருளாதார நெருக்கடியை தீர்க்க பாகிஸ்தான் (Pakistan) நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் திணறி வருகின்றது.
இதனால் அங்கு பண வீக்கம் அதிகரித்ததால் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
புதிய திட்டம்
இதன் காரணமாக பாகிஸ்தான் அரசு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் அதிக கடன்களை பெற்றுள்ளது.

ஆனால் நெருக்கடியை சமாளிக்க போராடும் அந்நாட்டு அரசு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
அமெரிக்க டொலர்கள் நட்டம்
அதன்படி நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' (PIA) நிறுவனம் தனியார் மயமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் சொந்த பாரிய நிறுவனமான PIA கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டத்தை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |