பாகிஸ்தானில் பயங்கரம்: விடுமுறையில் சென்ற படையினரின் தொடருந்து மீது தற்கொலைத்தாக்குதல் : பலர் பலி
விடுமுறையில் வீடு திரும்பிய பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரையும் அவர்களது குடும்பத்தினரையும் ஏற்றிச் சென்ற தொடருந்து மீது ஞாயிற்றுக்கிழமை தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் தற்கொலைத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தொடருந்து மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் மோதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 70 பேர் காயமடைந்தனர்.
உரிமை கோரிய அமைப்பு
பிரிவினைவாத தீவிரவாதக் குழுவான பலூச் விடுதலை இராணுவம் (BLA), ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், இந்தத் தாக்குதலைத் தாங்கள் நடத்தியதாகவும், இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்றும் விவரித்துள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து என்ஜினும் மூன்று பெட்டிகளும் தடம் புரண்டன, மேலும் இரண்டு பெட்டிகள் தீப்ற்றின என்று தொடருந்து அமைச்சகம் கூறியது. மேலும், பாதுகாப்புப் படைகள் அப்பகுதியைச் சுற்றி வளைத்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அது தெரிவித்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |