பனாமாவில் வறட்சி : சர்வதேச வர்த்தகமே முடங்கும் அபாயம்!

By Kathirpriya Nov 12, 2023 09:22 AM GMT
Report

பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக கப்பல்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஒரு மாதத்துக்கும் மேலாக சரக்குகளுடன் கப்பல்கள் நடுக்கடலில் காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தின் தன்மையை மாற்றியமைத்து எளிமையாக்கிய இரண்டு திட்டங்களாக சூயஸ் கால்வாயும் மற்றும் பனாமா கால்வாயும் திகழ்கிறது.

அத்திலாந்திக் சமுத்திரத்தினையும், பசுபிக் சமுத்திரத்தினையும் இணைத்து தென் அமெரிக்காவை சுற்றிச் செல்லும் பயண நேரத்தைக் குறைப்பதற்காக பனாமா நாட்டிலுள்ள காடன் ஏரியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட கால்வாயே பனாமா கால்வாய் ஆகும்.

இலங்கை அணி தொடர்பில் மஹேல வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை அணி தொடர்பில் மஹேல வெளியிட்ட அறிவிப்பு

நீர்ப்பூட்டு சாதனம்

கடல் மட்டத்திலிருந்து 85 அடி உயரத்தில் உள்ள இந்த கால்வாயின் ஊடாக கப்பல் செல்ல வேண்டுமாக இருந்தால் அது கடல் மட்டத்திலிருந்து 85 அடிக்கு நீர்ப்பூட்டு சாதனம் ஒன்றின் மூலம் உயர்த்தப்படுகிறது.

பின்னர் ஏரியிலிருந்து வரும் நீரின் மூலம் இந்த நீர்ப்பூட்டு இயங்கி, கப்பல்களை உயர்த்தி காடன் ஏரியைக் கடந்த பிறகு கடலில் சமநிலையில் இறக்கிவிடும், இந்த பயணத்தின் போது இந்த கால்வாயில் 5 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கப்பலின் வகை, சரக்கின் வகை, சரக்கின் எடையைப் பொருத்துக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதுவே பனாமா நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியடித்துவம் வாய்ந்த வருமானமாக திகழ்கிறது.

இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கான சாத்தியம்: களத்தில் ரணில்

இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கான சாத்தியம்: களத்தில் ரணில்

பனாமாவில் வறட்சி : சர்வதேச வர்த்தகமே முடங்கும் அபாயம்! | Panama Canal Faces Water Crisis Due To Wheather

மேலும், இந்தக் கால்வாயின் வழியாக நாளொன்றுக்கு 38 கப்பல்களும், ஆண்டுக்கு 14,000 சரக்குக் கப்பல்களும் செல்கிறது.

உலகப்பொருளாதாரத்தின் முக்கியப்புள்ளியாக விளங்கும் இந்த பனாமா கால்வாயில் தற்போது புதிய பிரச்சினை உருவாகியுள்ளது இதனால் சர்வதேச பொருளாதாரமே பாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு (2023) பனாமா நாட்டில் மழைவீழ்ச்சி 30 சதவீதம் குறைவாக கிடைத்துள்ளது, இதனால் அந்தப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது, இதனால் பனாமா கால்வாயில் நீரின் அளவும் குறைந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டை தடைசெய்ய முக்கிய காரணம் : வெளியானது தகவல்

இலங்கை கிரிக்கெட்டை தடைசெய்ய முக்கிய காரணம் : வெளியானது தகவல்

சர்வதேச நீர்வழி வர்த்தகம்

இதன் காரணமாக கப்பல்களைக் கடல் மட்டத்திலிருந்து உயர்த்துவதில் சிரமமுள்ளதால், கப்பல் போக்குவரத்தின் அளவைக் குறைக்க வேண்டிய நிலைக்கு கால்வாய் நிர்வாகத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் வரை நாளொன்றுக்கு 38 கப்பல்கள் வரை பனாமா கால்வாய் வழியில் சென்ற நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை வெறும் 3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சரி செய்வதற்காகாக பனாமா நாட்டுத் தலைவர்களினால் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்

பனாமாவில் வறட்சி : சர்வதேச வர்த்தகமே முடங்கும் அபாயம்! | Panama Canal Faces Water Crisis Due To Wheather

அதன்படி, 2024 பெப்ரவரி முதல் நாளொன்றுக்கு 18 கப்பல்களை கால்வாயினூடாக செல்ல அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது சர்வதேச நீர்வழி வர்த்தகத்தினை பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர், பனாமா கால்வாயினை கடக்க வரிசையில் காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது பல்வேறு பிரச்சினைகளுக்கு வலி வகுக்கும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே, கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் 200-க்கும் மேற்பட்ட கப்பல், கால்வாயை கடப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருப்பதால் சரக்குப் போக்குவரத்தில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் முன்னணி கப்பல் நிறுவனம் ஒன்று சுமார் 4 லட்சம் அமெரிக்க டொலர்கள் அதிகமாகக் கொடுத்து வரிசையைத் தவிர்த்து கடந்து செல்ல பேரம் பேசியுள்ளதாகவும், மேலும், பல கப்பல்கள் சுற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

சர்வதேச அளவில் 5 சதவீத வர்த்தகத்தைக் கையாளும் பனாமா கால்வாய் முடங்கியிருப்பதால், உலகளாவிய விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக சர்வதேச அளவில் உணவு, எரிவாயு, சமையல் எண்ணெய் மற்றும் பிற பொருள்களின் விலைகள் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தை வலுப்படுத்த மாற்று வழித்தடங்களை உருவாக்குவது அவசியம் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.  

பலஸ்தீனர்களிடம் கைப்பற்றிய நிலங்களில் பணிபுரிய இலங்கையர்கள் : மேலும் மோதலுக்கு வழிவகுக்குமென எச்சரிக்கை

பலஸ்தீனர்களிடம் கைப்பற்றிய நிலங்களில் பணிபுரிய இலங்கையர்கள் : மேலும் மோதலுக்கு வழிவகுக்குமென எச்சரிக்கை

ReeCha
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019