கட்டுநாயக்கவில் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டிலிருந்து வந்த பொதி
மெக்சிக்கோவிலிருந்து மாத்தறைக்கு கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் அடங்கிய பொதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
மாத்தைறயில் உள்ள நபருக்கு சந்தேகத்திற்கிடமான முறையில் இப்பொதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் அதனை கொண்டு சென்றவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் 650 கிராம் மெத்தம்பெட்டமைன் ஐஸ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
பொதியை எடுத்துச் செல்ல வந்தவர் கைது
இந்த பொதியை எடுத்துச் செல்ல வந்த சந்தேக நபரை, சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த மருந்துக ளின்பெறுமதி சுமார் 13 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும், இது சமீபத்திய வரலாற்றில் மெக்சிகோவிலிருந்து கைப்பற்றப்பட்ட முதல் மெத் தம்பேட்டமைன் தொகையென தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், காவல்துறை போதைப்பொ ருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளும் இதற்கு ஆதரவளித்து வருகின்றனர்.
ஐஸ் பொதி
விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இந்த ஐஸ் பொதி , அதிகாரிகளிடம் அகப்பட்டது. போதைப்பொ ருளை பொதிகள் மூலம் நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்படுவதால், சுங்க அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா
