கொழும்பில் வாகன நிறுத்துமிட கட்டணங்கள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தம்
By Dharu
கொழும்பு மாநகர சபை, தனது அதிகார வரம்பு முழுவதும் வாகன நிறுத்துமிடக் கட்டணம் அறவிடுவதை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இன்று (18) நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதி மேயர் ஹேமந்த வீரகோன் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய மோதல்
தொடர்ந்து நடைபெற்று வரும் உலகளாவிய மோதல்கள் மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், பொதுமக்கள் தற்போது எதிர்கொள்ளும் கணிசமான நிதிச் சுமையைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அவர் விளக்கியுள்ளார்.

முன்னதாக காலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை வாகன நிறுத்துமிடக் கட்டணம் அறவிடப்பட்டு வந்த நிலையில், தற்போது மறு அறிவிப்பு வரும் வரை அத்தகைய கட்டண அறவீடு அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக துணை மேயர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |