இலங்கை திவாலாகி விட்டது! நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்திய சஜித்

Sri Lanka Parliament Sajith Premadasa Sri Lankan political crisis
By S P Thas May 04, 2022 06:18 AM GMT
Report

இலங்கை தற்போது வெனிசூலா மற்றும் லெபானான் போன்ற திவாலான நாடாக மாறியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாட்டின் அரச தலைவரால் எடுக்கப்பட்ட பைத்தியக்கார தீர்மானம் காரணமாக இன்றைய நிலை ஏற்பட்டுள்ளது. உண்மையில் பண்டோரா மற்றும் ஏனைய இடங்களில் வைப்புச் செய்யப்பட்டுள்ள டொலர்களை நாட்டுக்கு கொண்டு வந்தால் நாட்டில் மீண்டும் டொலர்கள் கிடைக்கும்.

நிதியமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் தவறுகளை ஏற்றுக்கொண்டமையை வரவேற்கிறேன், அமைச்சரவையில் இருந்துகொண்டு அமைச்சரவையில் இடம்பெற்ற தவறுகளை ஏன் தட்டிக்கேட்கவில்லை.

இன்று வறுமை ஒழிப்பு திட்டத்தை விமர்ச்சிக்கவேண்டாம், இந்த திட்டங்களை நடப்பு அரசாங்கமே அரசியலுக்காக பயன்படுத்தியது.

அரச சேவையாளர்களுக்கு வழங்கப்பட்ட வேதன உயர்வு பிழையானது என்று நிதியமைச்சர் குறிப்பிடுகிறார். இதனை நான் கண்டிக்கிறேன். அதன் காரணமாக நாட்டில் நிதி பிரச்சினை ஏற்படவில்லை.

எவ்வாறாயினும், இலங்கையில் கடந்த 30 மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளில் இருந்து வெளியேறி சர்வதேசத்துடன் பேசுவதற்கான பிரயத்தனத்துக்காக தாம் நிதியமைச்சருக்கு நன்றி கூறுவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கைக்கு உதவியளிப்பதற்கு முன்னர் இந்தியா, தம்மிடம் உதவியளிப்பதா? இல்லையா? என்பதை வினவியதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

அவசரக்கடன் பெறும் வகையில் குறித்த சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்க்கட்சி தயார் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை சர்வதேச உணவுத்திட்டம், மற்றும் ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுடன் பேசி எதிர்வரும் காலத்தில் எதிர்பார்க்கப்படும் உணவுத் தட்டுப்பாட்டை தவிர்க்கவேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.

நடப்பு ஜனாதிபதியின் கீழ் இந்த நாட்டை கொண்டு செல்லமுடியாது என்று குறிப்பிட்ட அவர், தமது கட்சி சமர்ப்பித்துள்ள இரண்டு நம்பிக்கையில்லா யோசனைகளுக்கு விரைவான திகதியை தருமாறும் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒருவரை நியமிக்குமாறும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில் கருத்துரைத்த சபாநாயகர், பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு நாளை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி